தானம்
முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி
அவனுக்கென்ன .......
.
.
அது மக்களின் வரிப்பணம் தானே ..
-------மு கண்ணதாசன் ,மின் அஞ்சல் வழியாக
மனிதர்கள்
கோடிக்கணக்கான
மைல்கள் தூரத்திற்கு அப்பால்
சுழன்று
உலவ்க்கொண்டிருக்கும்
ஒவ்வொரு கிரகங்களின்
பெயர்களை
கிழமைகளுக்கு வைத்த
மனிதன்
மனிதர்கள் வாழும்
பூமியின் பெயரில்
ஒரு கிழமைக்கும்
பெயர் வைக்கவில்லை
.
.
மனிதன்
மனிதர்களை
மதிப்பதில்லை ....
மின் அஞ்சல் வழியாக ..நா.முத்து கிருஷ்ணன்
பெண்
மண்ணில் பெண்களுக்கு பஞ்சமில்லை
ஆனால்
உன்னைப்போல் யாருமில்லை....
------------ராஜா ...
நெத்தி அடி வரிகள் ;
பச்சை உண்மை
உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது ..
ஏமாற மட்டுமே தெரியும் ....
---------கோவை தமிழன் ,மின் அஞ்சல் வழியாக
வேறுபாடு
இரண்டு மலர்கள் பேசிகொன்டன ...
ஒரு செடியில் தானே ஒன்றாக மலர்ந்தோம் !
பின்பு உனக்கு மணவறை
எனக்கு ஏன் கல்லறை ..?
மின் அஞ்சல் வழியாக ,,கோவை தமிழன்
ஊர் பேச்சு
போராடும் வரை வீண் முயற்சி என்பார்கள் ...
வெற்றி பெற்ற உடன் விடா முயற்சி என்பார்கள்
மின் அஞ்சல் வழியாக ----கோவை _தமிழன்
அரசின் சாதனைகள் ??
புதிதாய் கட்டப்பட்ட பாலங்களும்
வெட்டி விரிவாகபட்ட சாலைகளும்
நினைவூட்டின
.
.
அரசின் சாதனைகளை அல்ல..
.
.
அங்கிருந்து அகற்றப்பட்ட பசுமையான மரங்களை ........
-----------மகாராஜா ,,மின் அஞ்சல் வழியாக .....
எதிர் காலம்
நீ என்னை கடந்து செல்லும் பொது
என்மேல் வீசிய பார்வைகள் தான்
உறுதி செய்தன,
.
.
.
எனக்கும் எதிர்காலம் உண்டென்பதை .........
-----------மகாராஜா ,மின் அஞ்சல் வழியாக ..........
தமிழ் ஹைக்கூ SMS கவிதை
மற்றவர்கள் சென்ற பாதையில் நீங்களும் செல்லாதீர்கள் …
உங்களின் பாத சுவடுகள்
தெரியாமல் போய்விடும் ......
-----மெர்வின் ,மின் அஞ்சல் வழியாக
இதயம்
பேருந்து நெரிசலில் அவள் நசுக்கீயது,
என் இதயத்தை ...
--------s.சரவணன் மின் அஞ்சல் வழியாக
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .