கவிதை நடை
நீ நடந்துவரும் அழகை
ஒரு கவிதையாய்
சொல்வதற்குள்
நூறு பாடல்களை பாடிவிட்டது
உன் கால் கொலுசு ....
மின் அஞ்சல் வழியாக,,,,,, சுரேஷ்
உனக்காக
எடுத்து
சூடிக்கொள்
உன்
நினைவுகளால்
பூத்து கிடக்கும்
என் மனதை ...
மின் அஞ்சல் வழியாக ... செல்வா
அடடா
பூக்காமலும்
உதிராமலும் ...
அரும்பாக மட்டுமே
அழகாக
இருக்கிறதே .!
உன்
மௌன உதடுகள் ...!
ரவி சந்திரன்,,மின் அஞ்சல் வழியாக
காதல் தோல்வி
என்னை நீ
ஏமாற்றியது
உனக்கேன்னவோ
சாதாரணம்
என் நெஞ்சிலோ
சதா "ரணம்"
மின் அஞ்சல் வழியாக, பெரிய சாமீ
கேள்வி
வாழ்கையில் ஒரு பாதி
கற்றலில் கழிந்தது !
மறு பாதி
தேடலில் கழியப்போகிறது !
மீதம் எங்கே இருக்கிறது வாழ்வதற்கு ...?
ரபீக் ,புளியங்குடி மின் அஞ்சல் வழியாக
பாவ மன்னிப்பு
நேற்று என் கைகளை
முட்களால் ...
காயப்படுத்திய ரோஜா
இன்று
கண்ணீர் விட்டு
அழுகிறது ...!
பனித்துளியாய் !!
மின் அஞ்சல் வழியாக ....கோபி ,சென்னை
காதல் யாத்திரை
அவள்
கொலுசு சத்தத்தோடு
நடக்கும் போது
சத்தமில்லாமல்
கூடவே
நடக்கிறது
..
..
என்
காதல் ...
மின் அஞ்சல் வழியாக ,,,ரவி
உன்னுள் தொலைந்தேன்
எப்படியோ
தேடி தேடி
கண்டுபிடித்துவிட்டேன்
என்னை ...!
மறுபடியும்
அவளிடம்
மட்டும்
தொலைக்க ...
ரவி , மின் அஞ்சல் வழியாக
கண் மை
என்னை கொல்வதற்கு
உன் விழிகள்
ஒன்றே போதுமே
பின்
அதில் ஏன்
விஷம் வேறு தடவுகிறாய்....?
முத்து,சாத்தான் குளம்
நில நடுக்கம்
விண்ணை நோக்கி
விதவிதமான
அடுக்கு மாடி வீடுகள் !
சுமை தாங்காமல்
சுளுக்கு விழுந்தது
பூமிக்கு ....
சரவணன் மயிலாடுதுறை
ஆட்டம்
வாலை ஓட்ட அறுத்தும்
ஆட்டம் போடுகிறது
வானத்தில்
பட்டம்!
கமால், ராய பேட்டை
அடடே
முட்கள் இருந்தும்
கவலை இல்லாத பயணம் ..
"கடிகாரம்"
ஷண்முக குமார் .... திருச்சி
என்னுள் (நீ)
நீ
என்னிடம்
எதை வேண்டுமானாலும்
கேள் ..
என்னுள்
இருக்கும்
உன்னைத்தவிர ....
செந்தில் ..,ஊட்டி
முதற்காதல்
சஹாராவில் சிந்திய
முதல் பனித்துளியை விட
தன்மையானது ........
என்னவன் சுவாசம்
சுமக்கும் காற்றின் தீண்டல் ...
இரவு வானில்
வரும் நிலவை விட
ஒளியானது ....
புன்னகை சிந்தும்
இதழ்களின் முகம் .........
கம்பன் செல்லி
கவிதைகளை விட
இனிமையானது ........
உறங்கும் பொழுதில்
உலரும் சொற்கள் ............
வேரின் நுனி செல்லும்
நீர்த்துளியை விட
ஆழமானது ......
நானும் உன்னோடு
நாளும் உன் நினைவோடு .....
அருணா..
ஓவியம்
சுத்தம் செய்ய மனம் வரவில்லை
ஓவியமாய் இருக்கிறது
ஒட்டடை .....
மின் அஞ்சல் வழியாக ....மீரா
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .