தமிழ் கவிதைகள்..தமிழ் காதல் கவிதைகள் ..தமிழ் காதல் தோல்வி கவிதைகள் ..தமிழ் புது கவிதைகள் ..தமிழ் மரபுக்கவிதைகள்..சிந்தனை கவிதைகள் ...சமுதாய கவிதைகள் ..விழிப்புணர்வு கவிதைகள் ...வைரமுத்து கவிதைகள் ..தபு சங்கர் கவிதைகள்.....உங்கள் கவிதைகளை மின் அஞ்சல் வழியாக அணுப்புங்கள் ....பரிசுகளை வெல்லுங்கள்
Tuesday, November 30, 2010
காதல்
காதல்
வராத மழையில்
'குடை பிடிக்கிறேன்'
நான் உனக்கு!
நனைந்து விட்டதாக
துடைத்து விடுகிறாய்
நீ எனக்கு!
வெட்கத்தில்
பூக்கத் தொடங்கியது
காதல்....!
துங்கை செல்வா
மாலை
மாலை
இரவெல்லாம் விழித்திருந்து
மலர்ந்த பூக்கள்
பகலில் தூக்கம்...!
தண்ணீர் தெளித்து
தட்டி எழுப்பினாள்
'பூக்காரி'
பாங்காரு
நிஜம்
நிஜம்
பகல் வேளையெல்லாம்
உன் நினைவில் போனது
இரவெல்லாம்
உன் கனவிலே போகிறது....!
.
.காதல்....!!
மொய்தீன்
Monday, November 29, 2010
Sunday, November 28, 2010
இந்திய சுதந்திர தினம்
xU ehs; tpLKiw
kWgb Nfh\k;
nfhQ;rk; kpl;lha;
tphpAk; nfhbapy;
cjpUk; g+f;fs;
ekJ
fhjpy; $l…
“,dp ,y;iy cwf;fk;”-----n[hp
Friday, November 26, 2010
தங்க கொலுசு
தங்க கொலுசு ..
வைர மோதிரம் ..
தங்க தோடு...
வாங்கி கொடுத்தேன் என் காதலிக்கு ...
உனக்கென்ன வேண்டும் என்றேன் என் கண்ணீரை துடைக்க உன் கைக்குட்டை போதும் என்றாள் என் தோழி ...........
----------மின் அஞ்சல் வழியாக மோகன் ..
Tuesday, November 23, 2010
கோலம்
கோலம்
என் வாழ்க்கை கோலத்தில்
பல புள்ளிகள்
உன்னைப் போல...
.
.
ஒன்று இல்லையெனும்
என்
வாழ்க்கை இல்லை.
.....
Monday, November 22, 2010
வேறுபாடு
வேறுபாடு
மோர் விற்ற பணத்தையும்
காய் விற்ற பணத்தையும்
கிராமங்களில்
கடுகு டப்பாவிலும்
சீரக டப்பாவிலும்
சேர்த்து வைப்பார்கள்....
வாரத்திற்கு ஒருமுறை வரும்
குடி தண்ணீரை நகரங்களில்
கிரைண்டரிலும்
மிக்சி ஜாரிலும் கூடப்
பிடித்து வைக்கிறார்கள்
...நாவல் குமாரகேசன்
இழப்பு
அவளை மறக்க நினைத்து
மறந்து விட்டேன் ...
.
.நான் யார் என்பதை .......
மின் அஞ்சல் வழியாக ....ரூபின்
Sunday, November 21, 2010
ஈர விழிகள்
ஈர விழிகள்
அவளும் என்னை
காதலித்தால் என்று
புரிந்து கொண்டேன்...
கண்ணீருடன்
அவளுடைய
திருமணத்திற்கு
என்னை அழைத்த போது...!
தேன் மொழி ...
விலையேற்றம்
விலையேற்றம்
விலைவாசி ஏற்றம் !
மாப்பிள்ளைகளுக்கு
கிராக்கி !
விலை கொடுத்து வாங்க
வசதியில்லை ...!
பக்கத்துக்கு வீட்டு பையா...
ஓடிப் போகலாமா...?
பிச்சை ......
பெயர்ச்சி
பெயர்ச்சி
பெயர் மாற்றச்
சொல்கிறார்கள்
என் கணித மேதைகள் .
நல்லவேளை,
வாஸ்துவைக்
காரணம் காட்டி
உறுப்பு எதையும்
இடம் மாற்றச்
சொல்லவில்லை .
நல்லவேளை
தப்பினோம் ,
பிழைத்தோம் !
.........கவிஞர் .நீலமணி.
பெயர் மாற்றச்
சொல்கிறார்கள்
என் கணித மேதைகள் .
நல்லவேளை,
வாஸ்துவைக்
காரணம் காட்டி
உறுப்பு எதையும்
இடம் மாற்றச்
சொல்லவில்லை .
நல்லவேளை
தப்பினோம் ,
பிழைத்தோம் !
.........கவிஞர் .நீலமணி.
Saturday, November 20, 2010
முயற்சி
முயற்சி
முடங்கி கிடந்தால்
சிலந்தியும் நம்மை
வலை பிடிக்கும் .
எழுந்து நின்றால்
எரிமலையும் நமக்கு
வழி திறக்கும்
.
.கார்த்திக் ...
Tuesday, November 16, 2010
விதவை
விதவை
புதிதாய் பூத்த புது மலரே .
நீயும் உன் துணையை இழந்து விட்டாயா?
வெள்ளை நிறமாய் காட்சியளிக்கிறாய் ...
....மெர்வின்
மழை துளி
மழை துளி
மழை வெள்ளமாய் பேச நினைத்தாலும்
மழை துளியாய் மட்டுமே வார்த்தைகள் ....
..........அழகு ராஜ் ...
காலமெல்லாம் காத்திருப்பேன்
காலமெல்லாம் காத்திருப்பேன்
காலங்கள் கடந்தாலும் காண காத்திருப்பேன்
பருவங்கள் பறந்தாலும் பாட காத்திருப்பேன்
உடல் உறைந்தாலும் உறவாட காத்திருப்பேன்
உயிரை இழக்காமல் இருந்தால்...
நித்யா.....
இந்தியா டுடே
இந்தியா டுடே
அன்னியர் ஆதிக்கத்தை அங்குலம் அளவும்
அன்னை பூமியில் தோன்றிட விடோம்
-------------தேச பாதுகாவலர்கள்
அன்னியர் ஆதிக்கத்தை அங்குலம் அங்குலமாக
அன்னை பூமியில் தோன்றிட விடுவோம்
-------------தேச துரோகிகள் .
......பிரேம் குமார்
Sunday, November 14, 2010
Saturday, November 13, 2010
புகைப்படம்
அன்றுதான் எனக்கும்
மணி பர்ஸ்
வாங்கும் ஆசையே
வந்தது ..
பணம் கிடைத்ததால் ..
அல்ல ...
அவளின் புகைப்படம்
கிடைத்ததால் .. .. ..
தமிழ் பீட் ...
மின்னல்
மின்னல்
நேற்று
பெய்த மழையில்
குடை பிடித்து வந்த
அந்த மின்னலால்
பறிபோனது
என் பார்வை அல்ல....
என் மனது ..
தமிழ் பீட்
போட்டி
அவள் பின்னால்
போகும்போது தெரியவில்லை
இவ்வளவு சீக்கிரம்
அவளுக்கு
முன்னால் போவேன் என்று ....
"கல்லறைக்கு"
தமிழ் பீட்
வாசல் இல்லா வீடு
வாசல் இல்லா வீடு
அசந்து தூங்கும் காலையில் கடன் காரனாய் கதிரவன் வீசும்
இன்னிசை தாலாட்டாய் பேருந்தின் இசை
கண்ணீரை துடைத்து செல்லும் மழை சாரலில் கரைகிறோம்
என்று வரும் என் வீட்டிற்கு வாசல் படிகள் ......
மின் அஞ்சல் வழியாக .........சுகன்யா
அசந்து தூங்கும் காலையில் கடன் காரனாய் கதிரவன் வீசும்
இன்னிசை தாலாட்டாய் பேருந்தின் இசை
கண்ணீரை துடைத்து செல்லும் மழை சாரலில் கரைகிறோம்
என்று வரும் என் வீட்டிற்கு வாசல் படிகள் ......
மின் அஞ்சல் வழியாக .........சுகன்யா
Friday, November 12, 2010
இடிதாங்கி
இடிதாங்கியாக இல்லா விட்டாலும் சுமைதாங்கி ஆகிறேன் ..
உன்னால் ,உன் நினைவுகளை சுமப்பதினால் ...
விழி மூடி தூங்கும் நேரத்திலும் விழி முன்னே நினைவாய் நிற்கின்றாய்
விழி திறந்து காத்து இருப்பேன் என் வாசலில்
உன் பாத சுவடுகள் படியும் நாளை எதிர்நோக்கி .......!
-சுகன்யா மின் அஞ்சல் வழியாக .
உன்னால் ,உன் நினைவுகளை சுமப்பதினால் ...
விழி மூடி தூங்கும் நேரத்திலும் விழி முன்னே நினைவாய் நிற்கின்றாய்
விழி திறந்து காத்து இருப்பேன் என் வாசலில்
உன் பாத சுவடுகள் படியும் நாளை எதிர்நோக்கி .......!
-சுகன்யா மின் அஞ்சல் வழியாக .
Thursday, November 11, 2010
என்னவள்
என்னவள்
என் நுனி மூக்கு கோபம் கூட
என்னவளின் ஒரு நொடி சிரிப்பில் மறையும்
அவள் விழி ஓர கசிவை துடைக்க என் விரல் நுனி என்றும் ஏங்கும் ...!
-Dedicated to mom...........
மின் அஞ்சல் வழியாக சுகன்யா .
Wednesday, November 10, 2010
காணவில்லை
காணவில்லை
என் வீட்டு முற்றத்தில் சிதரிகிடக்கும்
அரிசிபருகைகளை அழகாய் கொத்திதின்னவரும்
குருவிக் கூட்டங்களை காணவில்லை
கண்டுபிடுத்துத் தாருங்கள்
குருவிகளோடு தொலைந்துபோன
அந்த அழகிய காட்சியை ....!
----மகாராஜா மின் அஞ்சல் வழியாக .
என் வீட்டு முற்றத்தில் சிதரிகிடக்கும்
அரிசிபருகைகளை அழகாய் கொத்திதின்னவரும்
குருவிக் கூட்டங்களை காணவில்லை
கண்டுபிடுத்துத் தாருங்கள்
குருவிகளோடு தொலைந்துபோன
அந்த அழகிய காட்சியை ....!
----மகாராஜா மின் அஞ்சல் வழியாக .
உளி
நாம் பெரும் "வலி"கள்...
நம்மை மேம்பட்ட மனிதனாக்க..
"உளி"யாக மாறிச் சிறம்பட செதுக்கவே..
படைக்கப் பட்ட ஒன்று...
--முருகவேல் மின் அஞ்சல் வழியாக
நம்மை மேம்பட்ட மனிதனாக்க..
"உளி"யாக மாறிச் சிறம்பட செதுக்கவே..
படைக்கப் பட்ட ஒன்று...
--முருகவேல் மின் அஞ்சல் வழியாக
காதலின் நிறம்
காதலின் நிறம்
காதலுக்கு கற்பனைகள்
அழகு ..!
ஆனால்
கற்பனையில்
மட்டும்தான்
காதல் அழகு .....!!
தமிழ் நெட்
மாற்றம்
மாற்றம்
வலிக்கின்ற இதயமும் வடிகின்ற கண்ணீரும்
நிச்சயம் ஒரு நாள் மாறும்
உண்மையான காதலும்
உறுதியான நம்பிக்கையும்
இருந்தால் ...
தமிழன்
திருடர்கள் ஜாக்கிரதை
திருடர்கள் ஜாக்கிரதை
கோவில் திருவிழாவில்
அறிவிப்பு செய்தார்கள்
கேட்டுகொண்டே தொலைத்தேன்
என் இதயத்தை
அவளிடம் ....
தமிழன்
நிஜம்
நிஜம்
பகல் வேலையெல்லாம் உன்
நினைவில் போனது
இரவெல்லாம்
உன் கனவிலே போகிறது ..!
காதல்...!!
மொய்தீன்
ஏக்கம்
ஏக்கம்
அதட்டுகிறார்
முதலாளி ...
அவசர அவசரமாய்
மணப்பெண்ணிற்கு
மாலை கட்டுகிறாள்
முதிர்கன்னி !
சே. பாக்கியராஜ்
நிலவின் வயது
நிலவின் வயது
சூரியனின் வயது
என்னவென்று
தெரியாது...
ஆனால்
நிலவின்
வயது தெரியும்...
பதினாறு!
அவள் தானே
என் நிலவு..
மூர்த்தி ...
கவலை
கவலை
பார்வை அம்புகள்
எத்தனை பட்டதோ ...
இத்தனை பருக்கள்
உன் முகத்தில் !..
தென்றல் ஆறுமுகம் ,மின் அஞ்சல் வழியாக
Sunday, November 7, 2010
தொட்டில் மரங்கள்
தொட்டில் மரங்கள்
*ஆங்கிலத்தில் திட்டுகிறார்
ஆசிரியர்
வகுப்பறைச் சுவற்றில்
"இனிய உளவாக
இன்னாத கூறல்"
* ஆங்கிலம் படித்தால் தான்
அறிவு வளரும் என்கிறீர்கள்
தமிழ் படித்த
கலாமை மட்டும்
தலைவர் என்கிறீர்கள்
*கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள்
எங்களையும்
கொஞ்ச
நேரம் ஒதுக்குங்கள்....
இப்படிக்கு இன்றைய குழந்தைகள்
*எங்களுக்காக
குழந்தைகள் காப்பகம்
இன்று.
உங்களுக்காக
முதியோர் காப்பகம்
நாளை.
...............சே .ப.வீரதிருக்குமரன்
Monday, November 1, 2010
காதல் வலை
காதல் வலை
கண்களால் வலை விரித்தாய்
புன்னகையால் சிறை பிடித்தாய்
குற்றங்கள் செய்தது நீ
தண்டனை மட்டும் எனக்கு !
உன் இதய சிறையில்
ஆயுள் கைதியாய் நான்...!
கிருத்திகா
உழைப்பு
உழைப்பு
வெயிலில் அலைந்து திரிந்து
கருவாடாய் ஆனாலும்
கூவி விற்கிறாள்
மீனை...!
ஜெனிபிர் ..சென்னை
உள்ளம்
உள்ளம்
உள்ளம் என்னும் வெற்றிடத்தை உன் நினைவுகள் கொண்டு நிரப்ப முயேன்றேன்
அது சுனாமியாய் மாறியது ஏனோ ?
- என் கோவகார காதலியே ...!
தாமஸ்
Subscribe to:
Posts (Atom)
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .