Thursday, December 15, 2011

முகத்தரிசனம்


முகத்தரிசனம்


முப்பது நாள் கழித்துதான்
எனக்கு உன் முழுமதி நிலவு
முகத்தரிசனம் கிடைக்குமென்கிறாய்..!

நிலவின்றி இரவிற்கேது வெளிச்சம்..?

நீயின்றி என் மனதிற்கேது வெளிச்சம்..?

விரைவில் என்னிடம் வந்து விடு...

என் விடியல் உனக்காக காத்திருக்கிறது..!

.
.
.
மின்  அஞ்சல்  வழியாக ...ராதா கிருஷ்ணன் 

திரும்பி வந்துவிடு என் singapore கணவா..!!


திரும்பி வந்துவிடு என் singapore கணவா..!!

திரும்பி வந்துவிடு என் singapore கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து
முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
கெஞ்சுபவனைப்போல...
மல்லிகைப்பூ தந்துவிட்டு
மன்றாடுகிறாய்!

பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய்
நடிக்கும் சின்னப்பையனைபோல...
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க
முயலும்போது குளிரடிப்பதாய் கூறி -
ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்...
கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்

கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா 'அடி கள்ளி '
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்...
என் singapore கணவா!
கணவா... - எல்லாமே கனவா....???

கணவனோடு இரண்டு மாதம்...
கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...
5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...
1 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
ٌஇது வரமா ..? சாபமா..?

கண்களின் அழுகையை...
கண்ணாடி தடுக்குமா கணவா?
நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் singapore கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்துவாழலாம்

விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வார விடுமுறையில் பிரியாணி...
காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படி... காமம் மட்டுமன்றி
எல்லா உணர்ச்சிகளையும் நாம்
பரிமாறிக் கொள்ளவேண்டும்

இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு
நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு
ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு
அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே
விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு...
நீ தங்கம் தேடிளiபெயிழசந சென்றாயே?
பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன...
பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம்
நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் singapore தேடுதலில்....
தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு -
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதேஇ
கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!

திரும்பி வந்துவிடு என் singapore கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

-எனது விழியில் கண்ணீருடன்....
(உங்கள் அன்பு மனைவி)

('தாய்க்குப்பின் தாரம்' என்பார்கள். அப்படிபட்ட புனிதமான உறவான மனைவியை குடும்ப சூழ்நிலையின் காரணமாக பிரிந்து வாழும் அனைத்து வெளிநாட்டு நண்பர்களுக்கும் இந்த கடிதப் பதிவு ஒரு சமர்ப்பனம்)

மின் அஞ்சல் வழியாக ...ராதா கிருஷ்ணன்

இனியவளே!


இனியவளே!


உயிருள்ளவரை
என்னால்
நிறுத்தமுடியாத
விஷயம் ஒன்று
காற்றை சுவாசிப்பது..!

உயிர்போனபின்பும்
நிறுத்தமுடியாத
விஷயம் ஒன்று
உன்னை நேசிப்பது....!!!

மின் அஞ்சல் வழியாக ....ராதா கிருஷ்ணன் ..

உன் நினைவுகள்...!!!


உன் நினைவுகள்...!!!

சுள்ளென்று சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலும்
நிலவின் குளிர்ச்சியாய்
உன் நினைவுகள்..!

அரவற்று கிடக்கும் பாலைவனத்திலும்
நத்தவனத்தின் பசுமையாய்
உன் நினைவுகள்..!

கடுங்குளிர் காலை பயணத்திலும்
கதகதப்பாய்
உன் நினைவுகள்..!

அலுவலக தொலை பேசி சினுங்கல்களிலும்
என் கைபேசியின்
உன் குருந்செய்தியின் மணியாய்
உன் நினைவுகள்..!

காலை நேர பயணத்தில்
ஆட்டோக்களின் அலறலுக்கும்
பேருந்தின் இரைச்சல் சபத்ததிற்க்கும் இடையில்
பேரமைதியாய்
உன் நினைவுகள்..!

பெரும் சூறை காற்று வீசும்போதும்
தென்றலின் தொடுதலாய்
உன் நினைவுகள் ..!

அம்மு
உன் நினைவுகளே போதும்
என் இதயம் துடிக்க
என்றென்றும் உயிர்த்திருப்பேன்..!!!

மின் அஞ்சல் வழியாக ...ராதா கிருஷ்ணன்.

ஏழ்மை




ஏழ்மையின் அவலம்
இவர்களையும் விட வில்லை
உணவிற்கே பஞ்சம்
உலை ஏற்ற விறகுக்கும்
பஞ்சம்....

...இவள் மேல் இயற்கைக்கும்
கோபமா?????
அடிக்கடி வந்து போகும்
உறவினர் போல்
இவள் வீட்டை சுத்தப்படுத்தும்
வெள்ள நீர்...

சமையலறையுடன் இவளுக்கான
போராட்டம் ....

மாடி வீடு அறியாது .....

நீதி தேவதைகள் கண் திறக்கும்
வரை இவள் போராட்டம் தொடரும் ...


மின் அஞ்சல் வழியாக ...தார்சி

Friday, October 28, 2011

வரம்




வரம் 

நான்   செய்த  பாவமோ ?

அல்லது  நான் வாங்கி  வந்த  சாபமோ ?

ஏனோ 
  
என்  வாழ்வில் 
 
மகிழ்ச்சி  மட்டும்  நீடிப்பதில்லை ...


சுசன் ..,மின் அஞ்சல் வழியாக 

அம்மா




அம்மா 

அம்மா உன்னை  கடவுளோடு  ஒப்பிட்டால் 

நான் ஏற்க மாட்டேன் 
 
கடவுள்  கல்லில்  செய்த  உருவம் 

என்  அம்மா பொறுமையில்  செய்த தெய்வம் 


அஜித்குமார் ...மின் அஞ்சல் வழியாக ...

சோதனை


சோதனை 


மனதில் நூறு  வேதனை 

சொல்ல  ஒரு  வார்த்தை  இல்லை 
 
இன்னும்  என்ன  சோதனை 
 
நல்லதொரு  வாழ்க்கை  இல்லை ...




மின் அஞ்சல் வழியாக ....தயானி 

Thursday, August 18, 2011

ஒவ்வாமை

ஒவ்வாமை 



நான்  நட்டு  வளர்த்த  செடியில்
பூத்த பூக்களையும்

காய்த்த கனிகளையும்
கண்டு  ரசித்த  என்  மனம்

ஏனோ  ஏற்க  மறுக்கிறது ....

பேஸ் புக்கில்
என் நண்பர்கள்
அனுப்பும்.....

  farmville requestkalai  


மின் அஞ்சல் வழியாக ...மகாராஜா 

உன் விழி

உன் விழி




நீ


உன் விழியே... விழியே
என் வலி தீர்த்திடும் மருந்தல்லவா

உன் மொழியே... மொழியே
என் கண்ணீரை துடைத்திடும் துணி அல்லவா

இது நெடு நாள் வாழும் பந்தம்
உன் மடி மீது தூங்கும் என் நெஞ்சம்

அடடா... அழகிய சொர்க்கம்
நீ.. அருகினில் இருந்தால் வாசல் திறக்கும்

உனை பார்த்த பின்புதானே
நானே நான் ஆகினேன்....


இதுவரை...
விடிந்த பின்னும் கிழக்கு எனக்கு இல்லை
இருந்திருந்தும் என் விரல் பிடித்தாய்
இனி என் உலகினில் சூரியன் தேவையில்லை...

முன்பு...
சுழன்றபோதும் சுகம் எனக்கு இல்லை
உடைந்திருந்தும் எனக்கு உயிர் கொடுத்தாய்
ஆகவே நீளும் நேரம் போதவில்லை...

வெறும் வானமாய், நெடுந்தூரமாய் நின்றேன்
புது வானவில்லாய், தொடும் நிழலாய் நீயும் வந்தாய்....



நீ...
சரி என்றால் அன்பே
எனக்கெனும் ஆயுளை உனக்கு கொடுத்திடுவேன்
நீ...
சிரிப்பதென்றால் அய்யோ
நான் சிறு குழந்தையாய் மாறிடுவேன்

மறைந்தோடும் தென்றலாய்
நாளும் மனதோடு தீண்டுகிறாய்
இனி.. என் உயிர் போவதென்றால்
உன் நிழல் மீது தான் அன்றோ...


மழை பொழிந்தால், உடனே
நான் குடையயன உனக்கிருப்பேன்
ஒரு துளி விழுந்தாலும் அய்யோ
என் உயிரையும் நான் இழப்பேன்...

எனக்காக துடிக்கும்
உனக்காக என் உயிர் தருவேன்
எனக்கேதும் இல்லைஎன்றபோதும்
நீ இருக்க மரணத்திலும் நான் இதழ் விரிப்பேன்


வெறும் வானமாய், நெடுந்தூரமாய் நின்றேன்
புது வானவில்லாய், தொடும் நிழலாய் நீயும் வந்தாய்....!!



மின் அஞ்சல் வழியாக ...வித்யாசன் 

Friday, July 22, 2011

சிறை



சிறை 

நிலவு ,வானம்,விடியல் .....

என  ஆயிரம்  கவிதைகள்

 மனதில் இருந்தும்

 எழுத  மட்டும்  முடியவில்லை ....

பள்ளி  செல்லாத  குழந்தை


தொழிலாளியாய் ....



மின் அஞ்சல் வழியாக ....ஜனனி

நறுமணம்



நறுமணம் 
நீ   என்னை 
 கடந்து  போகையில் 
 மனதில்  குழப்பம் ...

 வாசம்  வீசுவது 

 நீயா  இல்லை  பூவா  என்று ?


ராம்குமார்....மின் அஞ்சல்  வழியாக 

உன்னை நினைத்து



உன்னை   நினைத்து  

என்  வீட்டு  சுவற்றிற்கு

நான்  இட்ட  முத்தங்களை

 கேட்டு  பார் ..

அது  சொல்லும்

 என் காதலை
 சத்தமில்லாமல் .....!!!



புவனா ...மின் அஞ்சல் வழியாக

Thursday, June 30, 2011

மௌன மொழி



மௌன  மொழி …
நீ  பேசும் 
வார்த்தை  எல்லோருக்கும்  தெரியும் 

  ஆனால்

உன்  மௌனம்  உன்னை  நேசிப்போருக்கு   
மட்டுமே  புரியும் ...

தமிழன் ...மின் அஞ்சல் வழியாக 

விடா முயற்சி



விடா  முயற்சி …

நம்பிக்கையுடன் 
நகர்ந்து   கொண்டே  இரு 
“நதி" போல …

ஒரு   இடத்தில் வெற்றி 
காத்திருக்கு 
“கடலாக”

மின் அஞ்சல் வழியாக "தமிழன் " 

Friday, June 17, 2011

என் உலகம்


என் உலகம் 
என் உலகமே...  நீ  தான்
எங்கே  சுற்றினாலும் 
 
உன்னிடமே  முடிகின்றன .....

என் நினைவுகள் .......!!!

.
.புவனா..மின் அஞ்சல் வழியாக ..

Thursday, May 12, 2011

நான் உன்னை .........


நான்  உன்னை ......................
நான் உன்னை  காதலித்தேன் ,
காதலிக்கிறேன் 
இன்று  வரை  அல்ல  என்  வாழ்  நாள்  காலம்   
முடுயும்  வரை ,அழியும்  வரை 
யார்  தடுத்தாலும் ? யார்  எதிர்த்தாலும் ?

நீ  என்னை  திட்டி  மனம்  
வருந்தி  பேசி  இருக்கையில் 
நானும்  என் இதயமும்  உன்னை 
வெறுக்க  இது  வரை நினைத்தது  இல்லை 

ஏனோ ...........
முன்பு  இருந்த பாசமோ ,அன்போ  ,இஷ்டமோ 
இப்பொது  இல்லை என்று  தெரிந்த 
அந்த  நொடி  நான்  ஏதோ ...ஒரு   உயிர்  இல்லாத  
ஒரு  உடல்  போல  இருந்தேன் … 


அதே  போல் 
உன்னை நினைத்து  வாழ்ந்து 
கொண்டு  இருக்கும்  என் இதயத்தில் 
வேறு  ஒருவுனுக்கு  இடம்  குடுக்க 
நான் எப்போதும்  என்றுமே  விரும்ப  மாட்டேன்  
இந்த  முடிவு  என் இதயம்  
இந்த பூமியில்  துடிக்கும்  வரை ........நீடிக்கும் ......


கவி...மின் அஞ்சல் வழியாக ....

Wednesday, March 30, 2011

உன் நினைவுகள்...!!!



உன் நினைவுகள்...!!!

சுள்ளென்று சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலும்
நிலவின் குளிர்ச்சியாய்
உன் நினைவுகள்..!

அரவற்று கிடக்கும் பாலைவனத்திலும்
நத்தவனத்தின் பசுமையாய்
உன் நினைவுகள்..!

கடுங்குளிர் காலை பயணத்திலும்
கதகதப்பாய்
உன் நினைவுகள்..!

அலுவலக தொலை பேசி சினுங்கல்களிலும்
என் கைபேசியின்
உன் குருந்செய்தியின் மணியாய்
உன் நினைவுகள்..!

காலை நேர பயணத்தில்
ஆட்டோக்களின் அலறலுக்கும்
பேருந்தின் இரைச்சல் சபத்ததிற்க்கும் இடையில்
பேரமைதியாய்
உன் நினைவுகள்..!

பெரும் சூறை காற்று வீசும்போதும்
தென்றலின் தொடுதலாய்
உன் நினைவுகள் ..!

அம்மு
உன் நினைவுகளே போதும்
என் இதயம் துடிக்க
என்றென்றும் உயிர்த்திருப்பேன்..!!!



..
..
..
ராதா கிருஷ்ணன் 

இனியவளே!



இனியவளே!
உயிருள்ளவரை
என்னால்
நிறுத்தமுடியாத
விஷயம் ஒன்று
காற்றை சுவாசிப்பது..!

உயிர்போனபின்பும்
நிறுத்தமுடியாத
விஷயம் ஒன்று
உன்னை நேசிப்பது....!!!

..
..
..
ராதா  கிருஷ்ணன்  

நம் காதல்

நம் காதல்

என் உலகம் எதுவென்றால்
அது நீதானே
உன் இதயம் எதுவென்றால்
அது நான்தானே
நீ வேறு, நான் வேறு என்று வழி மாறிடாது
எப்போதும் நாமாவோம் ஒன்று....

இமை ஒட்டி சற்று விழி மூடினால்
என் இரவுக்குள் உன் முகம் விண்மீன்களாய்
என் கடிகார முள்ளாக நீ நகர்வதால்
என் காலம் கரைகிறது காதல் கணமாய்...

நீ வருகின்ற திசை எல்லாம் உனக்காகத்தான்
கிளை இலை எல்லாம் மழைத் துளியாக உதிர்கின்றதே
உன் வளையோசை அசைகின்ற இசை கேட்கத்தான்
வெயில் மீறி குயில் எல்லாம் தவம் கிடக்கின்றதே....

இமை மூடும் கணம் எனை நீ பிரிந்தாலுமே
என் வானம் தரைதட்டி வீழ்கின்றதே
உன் மடி மீது எனை சாய்த்து நீ தலை கோதினால்
அந்த தருணங்கள் தனி உலகங்கள் ஆகின்றதே....

எந்தன் உயிர் நீங்கும் நிமிடத்தில் உந்தன் விரல் தீண்டால்
எந்தன் தேகத்தின் காயங்கள் சுகமாகும்
உன் வாழ்க்கையின் மொத்தம் நான் நிரம்பினால்
நம் காதல் ஒன்றே உலகில் முதலாகும் !!

..
..
..
வித்யாசன் 

Monday, March 28, 2011

நிழல்

நிழல் 
நான்  வெட்டி  வீசிய  நகங்கள்
மரமாக  மாறி விட்டன 

நீ  வரும்போது  நிழல்
தர  வேண்டும்  என்பதற்காக .....


முஹமது மைதீன் 

நியாயம்

நியாயம் 
காதலுக்காக உன்  உயிரையும்  கொடு 
உன் காதல்  உண்மையாக  இருந்தால்  மட்டுமல்ல ...

உன்னை  நேசிப்பவரும் உண்மையாக 
இருந்தால்  மட்டுமே ....


முஹம்மத் மைதீன் ...

Saturday, March 19, 2011

தோழி



**போன வருடம்

பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன

தோழி ஒருத்திக்கு

இந்த பிறந்த நாளில்

இருக்கேனா... செத்தேனா?

எனத் தெரியவில்லை.



**அடுத்த கவிதைத் தொகுப்பின்

முதல் பிரதி

தனக்கே வேண்டுமெனச் சொன்ன

முப்பது தோழிகளின் புதிய எண்களும்

என்னிடம் இல்லை.



**மூன்று வேளைகளும்

சாப்பிட்டாயா? என

குறுந்தகவலில் குடைச்சல் தந்த

தோழியின் அலைபேசிக்கு

அழைக்கிறபோதெல்லாம்

அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்

சொல்லப்படுகிறது.



**என் மகளைத் தன் மகனுக்குக்

கேட்பேன் எனச் சொன்ன

தோழி ஒருத்தி

அவள் திருமணத்துக்கே

என்னை அழைக்கவில்லை.



**திருமணத்துக்குப் பிறகு

தற்செயலாகச் சந்தித்த

தருணமொன்றில் தோழி ஒருத்தியிடம்

கோபித்துக்கொண்டேன்

அவளோ

'அவர் சரி, அத்தை - மாமாவிடம்

சிநேகிதன் ஒருவன் இருந்தானென

எப்படிச் சொல்வது?' என்றாள்.

இருந்தானில் இறந்துபோயிருந்தது

எங்கள் நட்பு!

*
*
*
முருகவேல் ...

பஞ்சம்

ஏழ்மையின் அவலம்
இவர்களையும் விட வில்லை


உணவிற்கே பஞ்சம்
உலை ஏற்ற விறகுக்கும்
பஞ்சம்....


...இவள் மேல் இயற்கைக்கும்
கோபமா?????
அடிக்கடி வந்து போகும்
உறவினர் போல்
இவள் வீட்டை சுத்தப்படுத்தும்
வெள்ள நீர்...


சமையலறையுடன் இவளுக்கான
போராட்டம் ....


மாடி வீடு அறியாது .....


நீதி தேவதைகள் கண் திறக்கும்
வரை இவள் போராட்டம் தொடரும் ...

'
'
'
தார்சி ...

முழுமதி



முப்பது நாள் கழித்துதான்
எனக்கு உன் முழுமதி நிலவு
முகத்தரிசனம் கிடைக்குமென்கிறாய்..!


நிலவின்றி இரவிற்கேது வெளிச்சம்..?
நீயின்றி என் மனதிற்கேது வெளிச்சம்..?
விரைவில் என்னிடம் வந்து விடு…


என் விடியல் உனக்காக காத்திருக்கிறது..!

.
.
.
ராதா கிருஷ்ணன் 
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]