நீச்சல் குளத்துச் சிறுமி
தவறிப்போன
ஆற்றின் பேரழகை
புறக்கணிகப்பட்ட
கிணற்றின் சுடர்மிகு ஆழத்தை
மறுக்கப்பட்ட
குளத்தின் பெரும் அமைதியாய்
தேடித்தேடி நீந்துகிறாள்
சுற்றுலாத் தளத்தின்
செயற்கை நீச்சல் தொட்டியில்
சிறகுகளை குறுக்கிய படி
சிறுமி ஒருத்தி ..
-----------க .அம்சப் பிரியா ,மின் அஞ்சல் வழியாக ....
பூமி
நாம் நம் முன்னோர்களிடம் இருந்து
பூமியை
கடனாக பெற்று இருக்கிறோம்....
அனுபவிக்க முழு உரிமை உண்டு
அழிக்க துளி கூட உரிமை இல்லை ...
மின் அஞ்சல் வழியாக ....பசுமை தாசன்
தானம்
முல்லைக்கு தேர் கொடுத்தானாம்
பாரி மன்னன்
அவனுக்கென்ன
அது மக்களின் வரிப்பணம் தானே........
-------------மு. கண்ணதாசன் ,மின் அஞ்சல் வழியாக
யுக மாற்றம்
நிதான யுகத்தில்
அவசரமாய்
பிள்ளைகள் பெற்றார்கள்...
அவசர யுகத்தில்
நிதானமாய்
பிள்ளை பெறுகிறார்கள் !
--------- கே ஜி ராஜேந்திர பாபு ,மின் அஞ்சல் மூலமாக .....
மரம்
மரம் வெட்டிய பின்
மரத்தை தேடினான்
.
.
நிழலுக்காக ...
மின் அஞ்சல் வழியாக .....மினி
வெட்கம்
சூரியன் வந்தும்
மறையாத நிலவாய்
நான்....
என் வெட்கங்கள்
உன்னை பார்த்த பிறகும் ...!
----------அருணா ,மின் அஞ்சல் வழியாக
காதல்
பிறக்க காரணமும் காதல் தான் ..
இறக்க காரணமும் காதல் தான் ...
.
.
இரு மனிதன் கொண்ட காதலில் பிறக்கிறோம் ..
மனிதன் மீது
காலம் கொண்ட காதலில் இறக்கிறோம் ..!
------அருணா ,மின் அஞ்சல் வழியாக
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .