Thursday, September 30, 2010

சுவாசம்

சுவாசம்
சுவாசிக்க  காற்றே இல்லை
என்றாலும்
நான் உயிர் வாழ்வேன்  
நேசிக்க
நீ
இருக்கும் வரை
 
கென்னடி,மின் அஞ்சல் வழியாக  

வானத்து நிலவு

வானத்து நிலவு
அந்த  நிலவை  போல்  
நீயும்  தூரத்து  நிலவுதான்  
என  தெரிந்த  போதிலும்
என்  வீட்டு  முற்றத்தில்  நான்  அமர்ந்து
அந்த  நிலவையே  பார்த்துக்கொண்டிருப்பேன்
எந்தன்  இதய  வீணையில்
உன்  நினைவுகளை  மீட்டிக்கொண்டு ...
சிட்டு ,மின் அஞ்சல் வழியாக

"கோமா" காதல்

"கோமா" காதல்
என்னவளே
உன்னை  நினைத்து  நான்
என்னை  மறந்தேன்
ஆனால் 
 
 நீ
என்னை  மறந்து
யாருடன்  காதல்
கொள்கிறாய்
.
சாந்தன் மின் அஞ்சல் வழியாக

Wednesday, September 29, 2010

பாடும் கொலுசு

பாடும் கொலுசு
நீ  நடந்துவரும்  அழகை
ஒரு  கவிதையை  சொல்வதற்குள்
நூறு  பாடல்களை  பாடிவிட்டது
உன்  கால்கொலுசு ...

சுரேஷ்,...டெல்லி.

காதல் கொலுசு

காதல் கொலுசு
அவள்
கொலுசு  சத்தத்தோடு
நடக்கும் போது
சத்தமில்லாமல்  
கூடவே  
நடக்கிறது
என் 
  காதல் ...
 
 
ரவி ..மின் அஞ்சல் வழியாக..

Friday, September 3, 2010

மழை

மழை
நீ குடை பிடித்து
நடப்பதை பார்த்து
மழை.......
கண்ணீருடன் சொன்னது
.
.
"பயபுள்ள இப்ப கூட
குளிக்க மாட்டேங்குது பாரு..!
 
சுபாஷ்..சேலம்

விபத்து

விபத்து
நீ
நடந்து செல்லும் போது
மட்டும் அல்ல
என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
 நடந்து விடுகிறது
காதல் விபத்து !
 
தமிழ் மணி ,ஆக்ரா

புகார்

புகார்
எங்கே புகார் செய்வது ?
தொலைந்து போனது
 
என் இதயம் ....
 
பூஜா ...மின் அஞ்சல் வழியாக

Thursday, September 2, 2010

காதலியின் கோலம்

காதலியின் கோலம்
காற்றே
 மெல்ல  வீசு  
கலைத்து  விடாதே  
..
..
என்  காதலியின்  
கோலத்தை .... 
 
ராஜேஷ் ,புது கோட்டை

பிறப்பு

பிறப்பு
ராகங்கள்  ஒன்று  கூடி 
 உருவாக்கின ....
.
.
ஒரு  புல்லாங்குழலை
 
 
மின் அஞ்சல் வழியாக ..நாகராஜ்
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]