தமிழ் தாய்
அம்மாவென அழைத்தது குழந்தை
அடுத்த நிமிடம் விழுந்தது அடி
.
.
'கால் மீ மம்மி'
வசீகரன்
ஓட்டம்
முதியோர் இல்லம் நோக்கி
ஓட்டம் பிடித்தது குழந்தை
.
.
பாட்டி பாசம்!
வசீகரன்
சுமை
மூட்டை சுமப்பவனிடம்
சிறுவன் கேட்டான்
'நீ எந்தப் பள்ளிக்கூடம்'
வசீகரன்
வெள்ள மனசு
சாக்லைட்டைத் தின்றுவிட்டு
திருடனிடம் சொன்னது
'இந்த சங்கிலி கவரிங் !'
வசீகரன்
பாசம்
கோபமாய் அம்மா
குழந்தையைத் திட்டினாள்
.
.
வலியில் பாட்டி!!
வசீகரன்
மொழி
அம்மாவுக்கு மட்டும்
அரும்பொருள் புரிகிறது
தத்தக்கா புத்தக்கா!
வசீகரன்
வருங்கால இந்தியா
சுள்ளென்று வெயில்
வரிசையில் குழந்தைகள்...
எப்ப வருவார் அமைச்சர்?
வசீகரன்
நினைவுகள்
"உன்னை சுற்றி
ஒரு முறை பார் ..!
உன் நிழல்
இருக்கிறதோ இல்லையோ
என் நினைவுகள் உன்னை சுற்றியே இருக்கும் "..!
தாமஸ்.
ரகசியம்
பெண் என்பவள்
காக்க வேண்டிய
பொக்கிஷம் -
ஆனால்
பார்க்க
வேண்டிய ரகசியம்...
மோகன்
பந்தம்
உன் விரல் பிடித்து நடப்பது என்றால்
.
.
என் கை ரேகை மாறும்
நெடுஞ்சாலையாக!
வித்யாசன்
அழகு
நிலவை
சிறைப்பிடித்து
விட்டார்களோ?
ஜன்னலில் அவள்
'முகம்'....
சாஜிதா
காதல்
வராத மழையில்
'குடை பிடிக்கிறேன்'
நான் உனக்கு!
நனைந்து விட்டதாக
துடைத்து விடுகிறாய்
நீ எனக்கு!
வெட்கத்தில்
பூக்கத் தொடங்கியது
காதல்....!
துங்கை செல்வா
மாலை
இரவெல்லாம் விழித்திருந்து
மலர்ந்த பூக்கள்
பகலில் தூக்கம்...!
தண்ணீர் தெளித்து
தட்டி எழுப்பினாள்
'பூக்காரி'
பாங்காரு
நிஜம்
பகல் வேளையெல்லாம்
உன் நினைவில் போனது
இரவெல்லாம்
உன் கனவிலே போகிறது....!
.
.காதல்....!!
மொய்தீன்
அரசியல்
ek; fl;rpapd; rhh;gpy;
,e;j
gpr;ir epw;fpwhh;
,tiu
Nfhb Mf;f Ntz;baJ
cq;fs; nghWg;G....
நேசம்
மூச்சுக் காற்றை சுவாசிக்க மறந்தாலும்
நம்
நட்புக் காற்றில் சுவாசித்து இருப்பேன்
என்றும் நட்புடன்......
நா.சுரேஷ் குமார்
xU ehs; tpLKiw
kWgb Nfh\k;
nfhQ;rk; kpl;lha;
tphpAk; nfhbapy;
cjpUk; g+f;fs;
ekJ
fhjpy; $l…
“,dp ,y;iy cwf;fk;”-----n[hp
அன்பு
என் இமைகள் மூடினாலும் ,
என் கண்கள்
உன்னை
தேடி கொண்டே இருக்கும் .....
ஹரிணி ...
தங்க கொலுசு ..
வைர மோதிரம் ..
தங்க தோடு...
வாங்கி கொடுத்தேன் என் காதலிக்கு ...
உனக்கென்ன வேண்டும் என்றேன் என் கண்ணீரை துடைக்க உன் கைக்குட்டை போதும் என்றாள் என் தோழி ...........
----------மின் அஞ்சல் வழியாக மோகன் ..
கலியுகக் கண்ணகி
நீ தானோ..?
.
.
கணவனையும் எரிக்கின்றாய் ...?
தொடு தூரம்
தொலை தூரம்
பயணித்தாலும்
உ(எ )ன்னிடமே
எ(உ )ன் மனம் ...
....
கோலம்
என் வாழ்க்கை கோலத்தில்
பல புள்ளிகள்
உன்னைப் போல...
.
.
ஒன்று இல்லையெனும்
என்
வாழ்க்கை இல்லை.
.....
வேறுபாடு
மோர் விற்ற பணத்தையும்
காய் விற்ற பணத்தையும்
கிராமங்களில்
கடுகு டப்பாவிலும்
சீரக டப்பாவிலும்
சேர்த்து வைப்பார்கள்....
வாரத்திற்கு ஒருமுறை வரும்
குடி தண்ணீரை நகரங்களில்
கிரைண்டரிலும்
மிக்சி ஜாரிலும் கூடப்
பிடித்து வைக்கிறார்கள்
...நாவல் குமாரகேசன்
இழப்பு
அவளை மறக்க நினைத்து
மறந்து விட்டேன் ...
.
.நான் யார் என்பதை .......
மின் அஞ்சல் வழியாக ....ரூபின்
ஈர விழிகள்
அவளும் என்னை
காதலித்தால் என்று
புரிந்து கொண்டேன்...
கண்ணீருடன்
அவளுடைய
திருமணத்திற்கு
என்னை அழைத்த போது...!
தேன் மொழி ...
விலையேற்றம்
விலைவாசி ஏற்றம் !
மாப்பிள்ளைகளுக்கு
கிராக்கி !
விலை கொடுத்து வாங்க
வசதியில்லை ...!
பக்கத்துக்கு வீட்டு பையா...
ஓடிப் போகலாமா...?
பிச்சை ......
கேள்வி
அன்பே நம் காதல்
என்ன நகமா ?
வளர வளர வெட்டுகிறாய் ..?
...மாரி சங்கர்
பெயர்ச்சி
பெயர் மாற்றச்
சொல்கிறார்கள்
என் கணித மேதைகள் .
நல்லவேளை,
வாஸ்துவைக்
காரணம் காட்டி
உறுப்பு எதையும்
இடம் மாற்றச்
சொல்லவில்லை .
நல்லவேளை
தப்பினோம் ,
பிழைத்தோம் !
.........கவிஞர் .நீலமணி.
முயற்சி
முடங்கி கிடந்தால்
சிலந்தியும் நம்மை
வலை பிடிக்கும் .
எழுந்து நின்றால்
எரிமலையும் நமக்கு
வழி திறக்கும்
.
.கார்த்திக் ...
விதவை
புதிதாய் பூத்த புது மலரே .
நீயும் உன் துணையை இழந்து விட்டாயா?
வெள்ளை நிறமாய் காட்சியளிக்கிறாய் ...
....மெர்வின்
பாதை
பனித்துளியும்
உளியாய் இறங்கியது
நெஞ்சில்....
நீ நடந்த பாதை பார்க்கையில்.....
சுரேஷ்...
மழை துளி
மழை வெள்ளமாய் பேச நினைத்தாலும்
மழை துளியாய் மட்டுமே வார்த்தைகள் ....
..........அழகு ராஜ் ...
காலமெல்லாம் காத்திருப்பேன்
காலங்கள் கடந்தாலும் காண காத்திருப்பேன்
பருவங்கள் பறந்தாலும் பாட காத்திருப்பேன்
உடல் உறைந்தாலும் உறவாட காத்திருப்பேன்
உயிரை இழக்காமல் இருந்தால்...
நித்யா.....
இந்தியா டுடே
அன்னியர் ஆதிக்கத்தை அங்குலம் அளவும்
அன்னை பூமியில் தோன்றிட விடோம்
-------------தேச பாதுகாவலர்கள்
அன்னியர் ஆதிக்கத்தை அங்குலம் அங்குலமாக
அன்னை பூமியில் தோன்றிட விடுவோம்
-------------தேச துரோகிகள் .
......பிரேம் குமார்
அடடே
அன்னையும் பிதாவும்
'முன் எரி' தெய்வம் !
முதியோர் இல்லத்தில் !
ராம சந்திரன் ...
வலி
காதலிப்பது
யாராக இருந்தாலும்
கஷ்டபடுவது
நான் மட்டுமே..
"இதயம்"
மின் அஞ்சல் வழியாக ....யாமினி பிரியா
அன்றுதான் எனக்கும்
மணி பர்ஸ்
வாங்கும் ஆசையே
வந்தது ..
பணம் கிடைத்ததால் ..
அல்ல ...
அவளின் புகைப்படம்
கிடைத்ததால் .. .. ..
தமிழ் பீட் ...
மழை
தென்றலின்
தீண்டலால்
மேகம் என்ற
குழந்தை
"மழை"
தமிழ் பீட்
மின்னல்
நேற்று
பெய்த மழையில்
குடை பிடித்து வந்த
அந்த மின்னலால்
பறிபோனது
என் பார்வை அல்ல....
என் மனது ..
தமிழ் பீட்
அவள் பின்னால்
போகும்போது தெரியவில்லை
இவ்வளவு சீக்கிரம்
அவளுக்கு
முன்னால் போவேன் என்று ....
"கல்லறைக்கு"
தமிழ் பீட்
வாசல் இல்லா வீடு
அசந்து தூங்கும் காலையில் கடன் காரனாய் கதிரவன் வீசும்
இன்னிசை தாலாட்டாய் பேருந்தின் இசை
கண்ணீரை துடைத்து செல்லும் மழை சாரலில் கரைகிறோம்
என்று வரும் என் வீட்டிற்கு வாசல் படிகள் ......
மின் அஞ்சல் வழியாக .........சுகன்யா
இடிதாங்கியாக இல்லா விட்டாலும் சுமைதாங்கி ஆகிறேன் ..
உன்னால் ,உன் நினைவுகளை சுமப்பதினால் ...
விழி மூடி தூங்கும் நேரத்திலும் விழி முன்னே நினைவாய் நிற்கின்றாய்
விழி திறந்து
காத்து இருப்பேன் என் வாசலில்
உன் பாத சுவடுகள் படியும் நாளை எதிர்நோக்கி .......!
-சுகன்யா மின் அஞ்சல் வழியாக .
என்னவள்
என் நுனி மூக்கு கோபம் கூட
என்னவளின் ஒரு நொடி சிரிப்பில் மறையும்
அவள் விழி ஓர கசிவை துடைக்க என் விரல் நுனி என்றும் ஏங்கும் ...!
-Dedicated to mom...........
மின் அஞ்சல் வழியாக சுகன்யா .
காணவில்லை
என் வீட்டு முற்றத்தில் சிதரிகிடக்கும்
அரிசிபருகைகளை அழகாய் கொத்திதின்னவரும்
குருவிக் கூட்டங்களை காணவில்லை
கண்டுபிடுத்துத் தாருங்கள்
குருவிகளோடு தொலைந்துபோன
அந்த அழகிய காட்சியை ....!
----மகாராஜா மின் அஞ்சல் வழியாக .
நாம் பெரும் "வலி"கள்...
நம்மை மேம்பட்ட மனிதனாக்க..
"உளி"யாக மாறிச் சிறம்பட செதுக்கவே..
படைக்கப் பட்ட ஒன்று...
--முருகவேல் மின் அஞ்சல் வழியாக
காதலின் நிறம்
காதலுக்கு
கற்பனைகள்
அழகு ..!
ஆனால்
கற்பனையில்
மட்டும்தான்
காதல் அழகு .....!!
தமிழ் நெட்
மாற்றம்
வலிக்கின்ற இதயமும்
வடிகின்ற கண்ணீரும்
நிச்சயம் ஒரு நாள் மாறும்
உண்மையான காதலும்
உறுதியான நம்பிக்கையும்
இருந்தால் ...
தமிழன்
திருடர்கள் ஜாக்கிரதை கோவில் திருவிழாவில்
அறிவிப்பு செய்தார்கள்
கேட்டுகொண்டே தொலைத்தேன்
என் இதயத்தை
அவளிடம் ....
தமிழன்
நிஜம் பகல் வேலையெல்லாம் உன்
நினைவில் போனது
இரவெல்லாம்
உன் கனவிலே போகிறது ..!
காதல்...!!
மொய்தீன்
ஏக்கம் அதட்டுகிறார்
முதலாளி ...
அவசர அவசரமாய்
மணப்பெண்ணிற்கு
மாலை கட்டுகிறாள்
முதிர்கன்னி !
சே. பாக்கியராஜ்
வேதனை தனி மரங்கள்
தோப்பாகின...
முதியோர் இல்லம் !
நெல்லை கணேஷ்
நிலவின் வயது
சூரியனின்
வயது
என்னவென்று
தெரியாது...
ஆனால்
நிலவின்
வயது தெரியும்...
பதினாறு!
அவள் தானே
என் நிலவு..
மூர்த்தி ...
கவலை பார்வை அம்புகள்
எத்தனை பட்டதோ ...
இத்தனை பருக்கள்
உன் முகத்தில் !..
தென்றல் ஆறுமுகம் ,மின் அஞ்சல் வழியாக
தொட்டில் மரங்கள்
*ஆங்கிலத்தில் திட்டுகிறார்
ஆசிரியர்
வகுப்பறைச் சுவற்றில்
"இனிய உளவாக
இன்னாத கூறல்"
* ஆங்கிலம் படித்தால் தான்
அறிவு வளரும் என்கிறீர்கள்
தமிழ் படித்த
கலாமை மட்டும்
தலைவர் என்கிறீர்கள்
*கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள்
எங்களையும்
கொஞ்ச
நேரம் ஒதுக்குங்கள்....
இப்படிக்கு இன்றைய குழந்தைகள்
*எங்களுக்காக
குழந்தைகள் காப்பகம்
இன்று.
உங்களுக்காக
முதியோர் காப்பகம்
நாளை.
...............சே .ப.வீரதிருக்குமரன்
காதல் வலை கண்களால் வலை விரித்தாய்
புன்னகையால் சிறை பிடித்தாய்
குற்றங்கள் செய்தது நீ
தண்டனை மட்டும் எனக்கு !
உன் இதய சிறையில்
ஆயுள் கைதியாய் நான்...!
கிருத்திகா
உழைப்பு
வெயிலில் அலைந்து திரிந்து
கருவாடாய் ஆனாலும்
கூவி விற்கிறாள்
மீனை...!
ஜெனிபிர் ..சென்னை
அப்படியா
நல்ல காலம் எப்போ வரும் ..
ஏக்கத்துடன் குடுகுடுப்பைக்கரர் !
சாமி நாதன்...
உள்ளம்
உள்ளம் என்னும் வெற்றிடத்தை
உன் நினைவுகள் கொண்டு நிரப்ப முயேன்றேன்
அது சுனாமியாய் மாறியது ஏனோ ?
- என் கோவகார காதலியே ...!
தாமஸ்
நினைவுகள்
உன் உதடுகள் பேசமறந்த
வார்த்தைகளை உன் நினைவுகள்
பேசிவிடுகிறது என் நெஞ்யோடு ..........!
பேசும் கண்கள்
கவிதை பேசும் கண்கள்...!
காதல் பேசும் புருவம்....!
எதுவும் பேசாத உதடு......!
_இருந்தும்
எல்லாம் பேசிவிடும் உன் மௌனம் ......!
தொலைபேசி
அன்பானவனே ....!
நீ அறிவாயா ....?
உன் கரங்களால் எடுக்கும்
வரை கதறும் உன் தொலைபேசி
ஒலியைப்போல.......................
என் இதயமும் இங்கே
கதறுவதை .........!
தாடி
பெண்ணே....!
உள்ளத்தை நேசித்தால்
உறவுகள் வளரும் என்றார்கள் ......
நானும் உன்னை நேசித்தேன் .....
எனக்கும் வளர்கிறது ..
உன் உறவுகள் அல்ல....!
உன் நினைவாக தாடி ...............!
சூட்டி
காதல் விஞ்ஞானி
அன்பே ...
நம் காதலைப் பொறுத்தவரை
நான் ஒரு விஞ்ஞானி தான் !
உன் மனதின் ஆழத்தை
அறிந்து கொள்ள
இடை விடாமல்
முயற்சிககுரேனே..!
சுரேஷ் குமார் ...பரம குடி..
அகிம்சை "மகாத்மாவின் கொள்கை என்ன?"
கேள்விக்கு விடை தெரியாத மாணவனை
பிரம்பால் அடித்து விட்டு
விடை சொன்னார் ஆசிரியர்
"அகிம்சை"
கிருஷ்ணன்...வட சேரி ..
அடடா ...
வெண்ணிலவின் மேல்
பனித்துளி
என்னவளின் முகத்தில்
வியர்வை ..
உமா மகேஸ்வரி ....புது கோட்டை
நினைவுகள் 2
உன்னை மறந்து என்
விழிகள் தூங்கினாலும் ..........
என் இதயம் விடுவதில்லை ......
நான் விழிக்கும் முன்பே
உன் நினைவுகளை எழுப்பிவிடுகிறது............!
தனிமை
தனிமையில் நான் உன்னை நினைக்க
விரும்பவில்லை.... !
உன்னை நினைப்பதற்காகவே தனிமையை
நான் விரும்புகிறேன் ......................!
நினைவுகள்
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது .......
நீ பேசாமலே உன்
நினைவுகளை என்னோடு பேசவைக்க......!
தடைகளில்லை
அன்பே ....!
என் காதலில் முத்தங்களின்
ஈரமில்லை.......!
மூச்சுக்காற்றின் வெப்பமில்லை .....!
தொட்டுக்கொள்ள அருகிலில்லை .......!
உனக்கு நெருங்கிவர நேரமில்லை .......!
-அதனால்
விலகிச்செல்ல தேவையில்லை .....!
இருந்தாலும் நெருங்கிவிட்டேன் ......
நினைவுகளுக்கு தடைகளில்லை .....! -
ச.சூட்டி...மின் அஞ்சல் வழியாக
கரு
என் காதலுக்கு மட்டுமல்ல
என் கவிதைக்கும்
நீ தான் கரு ....என்பதால்
என் கவிதைகளில்
என் காதலும் சற்று கசிந்தது .
மின் அஞ்சல் வழியாக ...லதா கிருஷ்ணா 8870707094 jpt
பெண் குழந்தை
இரவு அம்மாவுக்கு
பிடித்திருந்தது .......!
உறவு அப்பாவுக்கு
பிடித்திருந்தது ..........!
இரண்டுக்கும் இடையில் உருவான
என்னை மட்டும் .......... ஏனோ ....
இருவருக்கும் பிடிக்கவில்லை.......!
மின் அஞ்சல் வழியாக -ச.சூட்டி
முன்னுக்கு பின் முரணாக
தமிழன்
புரியாத மொழி பேசுபவனை
குருவாக பார்க்கிறான்
சரியாகத் தமிழ் பேசுபவனைக்
குறு குருவெனப் பார்க்கிறான்
காற்றாடி ,கட்டில்,சோறு என்றால்
நகைக்கிறான்
திக்கு ,திங்கள்,ஆழி என்றால்
புரியாமல்
திகைக்கிறான்
உண்மை தானே
அவனைப் பொறுத்தவரை
மம்மி டாடி
அங்கிள் ஆன்டி என்று
பேசுவது கண்ணியம்
அப்பா அம்மா
அத்தை மாமா
சொற்கள் அன்னியம்!
புதுவை பிரபா ..தஞ்சை
அவளுடன் பயணம்
தனிமையான என் பயணத்தில்
நிழலாய் அவள் நினைவுகள் .
கிருஷ்ணா
கண்ணீர் கடல்
என்னவளே
உனக்காக கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்து நீராடிப்போ !!
அஜ்மீர் அலி
அய்யம்பேட்டை (தஞ்சை)
காதல் பிம்பம்
அடி பெண்ணே!
என் இதயம் ஒரு நாள் இரண்டாக உடையும்
அங்கு வந்து பார்
உன் பின்பம் தெரியும் !!!
அஜ்மீர் அலி
அய்யம்பேட்டை (தஞ்சை)
சுவாசம்
சுவாசிக்க காற்றே இல்லை
என்றாலும்
நான் உயிர் வாழ்வேன்
நேசிக்க
நீ
இருக்கும் வரை
கென்னடி,மின் அஞ்சல் வழியாக
வானத்து நிலவு
அந்த நிலவை போல்
நீயும் தூரத்து நிலவுதான்
என தெரிந்த போதிலும்
என் வீட்டு முற்றத்தில் நான் அமர்ந்து
அந்த நிலவையே பார்த்துக்கொண்டிருப்பேன்
எந்தன் இதய வீணையில்
உன் நினைவுகளை மீட்டிக்கொண்டு ...
சிட்டு ,மின் அஞ்சல் வழியாக
"கோமா" காதல்
என்னவளே
உன்னை நினைத்து நான்
என்னை மறந்தேன்
ஆனால்
நீ
என்னை மறந்து
யாருடன் காதல்
கொள்கிறாய்
.
சாந்தன் மின் அஞ்சல் வழியாக
பாடும் கொலுசு
நீ நடந்துவரும் அழகை
ஒரு கவிதையை சொல்வதற்குள்
நூறு பாடல்களை பாடிவிட்டது
உன் கால்கொலுசு ...
சுரேஷ்,...டெல்லி.
காதல் கொலுசு
அவள்
கொலுசு சத்தத்தோடு
நடக்கும் போது
சத்தமில்லாமல்
கூடவே
நடக்கிறது
என்
காதல் ...
ரவி ..மின் அஞ்சல் வழியாக..
மழை
நீ குடை பிடித்து
நடப்பதை பார்த்து
மழை.......
கண்ணீருடன் சொன்னது
.
.
"பயபுள்ள இப்ப கூட
குளிக்க மாட்டேங்குது பாரு..!
சுபாஷ்..சேலம்
விபத்து
நீ
நடந்து செல்லும் போது
மட்டும் அல்ல
என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
நடந்து விடுகிறது
காதல் விபத்து !
தமிழ் மணி ,ஆக்ரா
புகார்
எங்கே புகார் செய்வது ?
தொலைந்து போனது
என் இதயம் ....
பூஜா ...மின் அஞ்சல் வழியாக
காதலியின் கோலம்
காற்றே
மெல்ல வீசு
கலைத்து விடாதே
..
..
என் காதலியின்
கோலத்தை ....
ராஜேஷ் ,புது கோட்டை
பிறப்பு
ராகங்கள் ஒன்று கூடி
உருவாக்கின ....
.
.
ஒரு புல்லாங்குழலை
மின் அஞ்சல் வழியாக ..நாகராஜ்
கவிதை நடை
நீ நடந்துவரும் அழகை
ஒரு கவிதையாய்
சொல்வதற்குள்
நூறு பாடல்களை பாடிவிட்டது
உன் கால் கொலுசு ....
மின் அஞ்சல் வழியாக,,,,,, சுரேஷ்
உனக்காக
எடுத்து
சூடிக்கொள்
உன்
நினைவுகளால்
பூத்து கிடக்கும்
என் மனதை ...
மின் அஞ்சல் வழியாக ... செல்வா
அடடா
பூக்காமலும்
உதிராமலும் ...
அரும்பாக மட்டுமே
அழகாக
இருக்கிறதே .!
உன்
மௌன உதடுகள் ...!
ரவி சந்திரன்,,மின் அஞ்சல் வழியாக
காதல் தோல்வி
என்னை நீ
ஏமாற்றியது
உனக்கேன்னவோ
சாதாரணம்
என் நெஞ்சிலோ
சதா "ரணம்"
மின் அஞ்சல் வழியாக, பெரிய சாமீ
கேள்வி
வாழ்கையில் ஒரு பாதி
கற்றலில் கழிந்தது !
மறு பாதி
தேடலில் கழியப்போகிறது !
மீதம் எங்கே இருக்கிறது வாழ்வதற்கு ...?
ரபீக் ,புளியங்குடி மின் அஞ்சல் வழியாக
பாவ மன்னிப்பு
நேற்று என் கைகளை
முட்களால் ...
காயப்படுத்திய ரோஜா
இன்று
கண்ணீர் விட்டு
அழுகிறது ...!
பனித்துளியாய் !!
மின் அஞ்சல் வழியாக ....கோபி ,சென்னை
காதல் யாத்திரை
அவள்
கொலுசு சத்தத்தோடு
நடக்கும் போது
சத்தமில்லாமல்
கூடவே
நடக்கிறது
..
..
என்
காதல் ...
மின் அஞ்சல் வழியாக ,,,ரவி
உன்னுள் தொலைந்தேன்
எப்படியோ
தேடி தேடி
கண்டுபிடித்துவிட்டேன்
என்னை ...!
மறுபடியும்
அவளிடம்
மட்டும்
தொலைக்க ...
ரவி , மின் அஞ்சல் வழியாக
கண் மை
என்னை கொல்வதற்கு
உன் விழிகள்
ஒன்றே போதுமே
பின்
அதில் ஏன்
விஷம் வேறு தடவுகிறாய்....?
முத்து,சாத்தான் குளம்
நில நடுக்கம்
விண்ணை நோக்கி
விதவிதமான
அடுக்கு மாடி வீடுகள் !
சுமை தாங்காமல்
சுளுக்கு விழுந்தது
பூமிக்கு ....
சரவணன் மயிலாடுதுறை
ஆட்டம்
வாலை ஓட்ட அறுத்தும்
ஆட்டம் போடுகிறது
வானத்தில்
பட்டம்!
கமால், ராய பேட்டை
அடடே
முட்கள் இருந்தும்
கவலை இல்லாத பயணம் ..
"கடிகாரம்"
ஷண்முக குமார் .... திருச்சி
என்னுள் (நீ)
நீ
என்னிடம்
எதை வேண்டுமானாலும்
கேள் ..
என்னுள்
இருக்கும்
உன்னைத்தவிர ....
செந்தில் ..,ஊட்டி
முதற்காதல்
சஹாராவில் சிந்திய
முதல் பனித்துளியை விட
தன்மையானது ........
என்னவன் சுவாசம்
சுமக்கும் காற்றின் தீண்டல் ...
இரவு வானில்
வரும் நிலவை விட
ஒளியானது ....
புன்னகை சிந்தும்
இதழ்களின் முகம் .........
கம்பன் செல்லி
கவிதைகளை விட
இனிமையானது ........
உறங்கும் பொழுதில்
உலரும் சொற்கள் ............
வேரின் நுனி செல்லும்
நீர்த்துளியை விட
ஆழமானது ......
நானும் உன்னோடு
நாளும் உன் நினைவோடு .....
அருணா..
ஓவியம்
சுத்தம் செய்ய மனம் வரவில்லை
ஓவியமாய் இருக்கிறது
ஒட்டடை .....
மின் அஞ்சல் வழியாக ....மீரா
நீச்சல் குளத்துச் சிறுமி
தவறிப்போன
ஆற்றின் பேரழகை
புறக்கணிகப்பட்ட
கிணற்றின் சுடர்மிகு ஆழத்தை
மறுக்கப்பட்ட
குளத்தின் பெரும் அமைதியாய்
தேடித்தேடி நீந்துகிறாள்
சுற்றுலாத் தளத்தின்
செயற்கை நீச்சல் தொட்டியில்
சிறகுகளை குறுக்கிய படி
சிறுமி ஒருத்தி ..
-----------க .அம்சப் பிரியா ,மின் அஞ்சல் வழியாக ....
பூமி
நாம் நம் முன்னோர்களிடம் இருந்து
பூமியை
கடனாக பெற்று இருக்கிறோம்....
அனுபவிக்க முழு உரிமை உண்டு
அழிக்க துளி கூட உரிமை இல்லை ...
மின் அஞ்சல் வழியாக ....பசுமை தாசன்
தானம்
முல்லைக்கு தேர் கொடுத்தானாம்
பாரி மன்னன்
அவனுக்கென்ன
அது மக்களின் வரிப்பணம் தானே........
-------------மு. கண்ணதாசன் ,மின் அஞ்சல் வழியாக
யுக மாற்றம்
நிதான யுகத்தில்
அவசரமாய்
பிள்ளைகள் பெற்றார்கள்...
அவசர யுகத்தில்
நிதானமாய்
பிள்ளை பெறுகிறார்கள் !
--------- கே ஜி ராஜேந்திர பாபு ,மின் அஞ்சல் மூலமாக .....
மரம்
மரம் வெட்டிய பின்
மரத்தை தேடினான்
.
.
நிழலுக்காக ...
மின் அஞ்சல் வழியாக .....மினி
வெட்கம்
சூரியன் வந்தும்
மறையாத நிலவாய்
நான்....
என் வெட்கங்கள்
உன்னை பார்த்த பிறகும் ...!
----------அருணா ,மின் அஞ்சல் வழியாக
காதல்
பிறக்க காரணமும் காதல் தான் ..
இறக்க காரணமும் காதல் தான் ...
.
.
இரு மனிதன் கொண்ட காதலில் பிறக்கிறோம் ..
மனிதன் மீது
காலம் கொண்ட காதலில் இறக்கிறோம் ..!
------அருணா ,மின் அஞ்சல் வழியாக
தானம்
முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி
அவனுக்கென்ன .......
.
.
அது மக்களின் வரிப்பணம் தானே ..
-------மு கண்ணதாசன் ,மின் அஞ்சல் வழியாக
மனிதர்கள்
கோடிக்கணக்கான
மைல்கள் தூரத்திற்கு அப்பால்
சுழன்று
உலவ்க்கொண்டிருக்கும்
ஒவ்வொரு கிரகங்களின்
பெயர்களை
கிழமைகளுக்கு வைத்த
மனிதன்
மனிதர்கள் வாழும்
பூமியின் பெயரில்
ஒரு கிழமைக்கும்
பெயர் வைக்கவில்லை
.
.
மனிதன்
மனிதர்களை
மதிப்பதில்லை ....
மின் அஞ்சல் வழியாக ..நா.முத்து கிருஷ்ணன்
பெண்
மண்ணில் பெண்களுக்கு பஞ்சமில்லை
ஆனால்
உன்னைப்போல் யாருமில்லை....
------------ராஜா ...
நெத்தி அடி வரிகள் ;
பச்சை உண்மை
உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது ..
ஏமாற மட்டுமே தெரியும் ....
---------கோவை தமிழன் ,மின் அஞ்சல் வழியாக
வேறுபாடு
இரண்டு மலர்கள் பேசிகொன்டன ...
ஒரு செடியில் தானே ஒன்றாக மலர்ந்தோம் !
பின்பு உனக்கு மணவறை
எனக்கு ஏன் கல்லறை ..?
மின் அஞ்சல் வழியாக ,,கோவை தமிழன்
ஊர் பேச்சு
போராடும் வரை வீண் முயற்சி என்பார்கள் ...
வெற்றி பெற்ற உடன் விடா முயற்சி என்பார்கள்
மின் அஞ்சல் வழியாக ----கோவை _தமிழன்
அரசின் சாதனைகள் ??
புதிதாய் கட்டப்பட்ட பாலங்களும்
வெட்டி விரிவாகபட்ட சாலைகளும்
நினைவூட்டின
.
.
அரசின் சாதனைகளை அல்ல..
.
.
அங்கிருந்து அகற்றப்பட்ட பசுமையான மரங்களை ........
-----------மகாராஜா ,,மின் அஞ்சல் வழியாக .....
எதிர் காலம்
நீ என்னை கடந்து செல்லும் பொது
என்மேல் வீசிய பார்வைகள் தான்
உறுதி செய்தன,
.
.
.
எனக்கும் எதிர்காலம் உண்டென்பதை .........
-----------மகாராஜா ,மின் அஞ்சல் வழியாக ..........
தமிழ் ஹைக்கூ SMS கவிதை
மற்றவர்கள் சென்ற பாதையில் நீங்களும் செல்லாதீர்கள் …
உங்களின் பாத சுவடுகள்
தெரியாமல் போய்விடும் ......
-----மெர்வின் ,மின் அஞ்சல் வழியாக
இதயம்
பேருந்து நெரிசலில் அவள் நசுக்கீயது,
என் இதயத்தை ...
--------s.சரவணன் மின் அஞ்சல் வழியாக
துயரம்
துபாய்!
வெளியில் இருப்பவனுக்கு
வாழ்நாள் கனவு...
உள்ளே இருப்பவனுக்கு
வாழ்நாளே
கனவு....
----இசாக் .மின் அஞ்சல் வழியாக ....திருச்சி
காதல் ஹைக்கூ
ஊரே நம் காதலை பற்றி பேச ,
நாம் மட்டும் அமைதியாய்,
கல்லறையில் ...
ராகவி ,singapore
சாதனை ஹைக்கூ SMS
"மலையை " பார்த்து " மலைத்து விடாதே ,
மலை மீது ஏறினால் அதுவும்
உன் "கால் அடியில் ".தான்
------மின் அஞ்சல் வழியாக ,ராஜா
சங்கிலி :
கழுத்துக்கு ஏனடி !?
உன் மனதிற்கு போடு
இப்படிக்கு வறுமை கணவன்
சிறை
நீ அணைத்தபோது சிறகுகல்லில் என்னை அன்னைததுபோல் இருந்தது ..!
அவளுக்கு மட்டும் தான் தெரியும் அது சிறகுகள் அல்ல சிறை என்று
......!
தாமஸ் ,மின் அஞ்சல் வழியாக ...
சிலருக்கு பனி துளி புடிக்கும் ,
சிலருக்கு மழை துளி புடிக்கும்
ஆனால் , யாரையாவது உண்மையாக 'நேசித்து ' பாருங்கள் ..
கண்ணீர் துளி கூட பிடிக்கும்
ரொமாண்டிக் தமிழ் கவிதை ஹைக்கூ
காதலி
காற்றில் கூட அவள் இருக்கிறாள் என்பதை உணர்தேன் ..!
தூசியாய் வந்து
என் கண்ணை கலங்க வாய்த்த பொது ......
தத்துவம் ஹைக்கூ
மலர்
உதிர்ந்த பூக்களுக்காக கண்ணீர் விடாதே .
மலர்கின்ற பூக்களுக்கு தண்ணீர் விடு ...
நகைப்பு தமிழ் ஹைக்கூ
முத்தம் ...சத்தமில்லாமல்
அனுமதி கேட்கவும் இல்லை ...
அனுமதி வழங்கவும் இல்லை ...
ஆனால் பிடிவாதமாக ஒரு முத்தம் ...
"கன்னத்தில் கொசு கடி "!
-----மகாராஜா ,
சிந்தனையை தூண்டும் தமிழ் ஹைக்கூ
கல்லறை
சவப்பெட்டி அழுகிறது ,
இறந்தது மனிதன் தானே ..?
என்னை ஏன் புதைகிரீர்கள் என்று ...
மின் அஞ்சல் வழியாக ,மேர்வின்
ரொமாண்டிக் தமிழ் ஹைக்கூ
உன்னை சந்திக்கம்மல் இறுக்க முடியும்
ஆனால்
உன்னை சிந்திகம்மல் இறுக்க முடியாது
----மின் அஞ்சல் வழியாக ,லாரா
யதார்தம்
பேருந்து பயணத்தில்
இயற்கை அழகை ரசிக்க முடியவில்லை ;
நடத்துனரின் சில்லறை பாக்கி !!!
-----ராகவி ,மின் அஞ்சல் வழியாக
துடிப்பு ஹைக்கூ
இடி இடிப்பது மழைக்காக ,
ஆனால் என் இதயம் துடிப்பது உனக்காக .
-----------ராகவி .,மின் அஞ்சல் வழியாக
காதல் சின்னம்
அவனும் இல்லை ,
அவளும் இல்லை .
யாருக்காக நிற்கிறது
காதல் காவியமாய் ?
தாஜ் மஹால் ...
----மின் அஞ்சல் வழியாக P.சதீஷ் குமார்
வாழ்க்கை
பசியோடு
அன்னதான போஸ்டர்ரை ஓட்டினான்...
தெருஓர சிறுவன் .
-----Submitted by கவிதைகுப்பன்
நண்பா
பூவிற்கு வாசம் ,
எனக்கு நீ சுவாசம் .
---மின் அஞ்சல் வழியாக A.ஸ்ரீனிவாசன்
செடியில் பூக்கும் மலரை விட
ஒரு நொடியில் பூக்கும் புன்னகை தான் அழகு
மின் அஞ்சல் வழியாக சேவியர் ...
வார்த்தைகளுக்கு அப்பால் ...
ஆயிரமாயிரம்
ஆறுதல் வார்த்தைகளும்
அளிக்க முடியாத ஒன்றை
அளித்து செல்கிறது
துக்க வீட்டை சுற்றி
துள்ளலாட்டம் போட்டு
கல கல சிரிப்புடன்
வளம் வரும் மழலை...
மரங்கள் ......மரணம் !
தோளுக்கு மேல்
வளர்ந்தவனை
கையால் அடிப்பதே
தவறு...
கோடரியால்
வெட்டுகிறார்களே நியாயமா?
கண்ணீர் விடும்
மரங்கள்!
----------கோ.செந்தில்,மின் அஞ்சல் வழியாக
வலி
அதெப்படி இறக்கமலேயே
மரண வலி?
என் பக்கம் திரும்பாமல்
செல்கிறாளே காதலி...!
-----------வரதராஜ்,மின் அஞ்சல் வழியாக
பேருந்து காதல்
அழகான தேவதைக்கு...
என்று தான் என்
காதல் கடிதங்களை
துவங்குகிறேன்,
உன் பெயர் தெரியாததால்...!
------செல்வராஜ், மின் அஞ்சல் வழியாக
எந்தப்
பெண்ணிடம்
கற்று கொண்டது
இந்த வெட்கத்தை ...!
தொட்டாசிநிங்கி..
மௌனம்
உன்னிடம்
கற்றுக்கொள்ள
வேண்டியது
நிறைய
இருக்கிறது
உன்
மௌனம்
தவிர...
------ர .ஆனந்தி ,மின் அஞ்சல் வழியாக
எனக்கு பிடிக்கிற
அத்தனையும்
உனக்குத்
தந்து விட வேண்டும் .
எனக்கு
என்னை பிடிக்கும் ....
----ர .ஆனந்தி ,மின் அஞ்சல் வழியாக
புதிர்
நீ
ஒரு புரியாத புதிர்
புரிந்தவர்கள் சொன்னார்கள் .
சொல்லிவிட்டு போகட்டும்.
புதிர்
எனக்கு பிடிக்கும் !
புரியமலயே...!
------
ர .ஆனந்தி ,மின் அஞ்சல் வழியாக
இன்று
"இசை கல்லூரி "
விடுமுறை ...
அவளின்
கால் "கொலுசு "
தொலைந்ததால்...
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .