Tuesday, October 26, 2010

முன்னுக்கு பின் முரணாக

முன்னுக்கு பின் முரணாக 
தமிழன் 
புரியாத மொழி பேசுபவனை 
குருவாக பார்க்கிறான்
சரியாகத் தமிழ் பேசுபவனைக்
குறு குருவெனப் பார்க்கிறான் 

காற்றாடி ,கட்டில்,சோறு என்றால்
நகைக்கிறான் 
திக்கு ,திங்கள்,ஆழி என்றால் 
புரியாமல் 
திகைக்கிறான் 

உண்மை தானே 

அவனைப் பொறுத்தவரை 
மம்மி டாடி 
அங்கிள்  ஆன்டி என்று 
பேசுவது கண்ணியம் 

அப்பா அம்மா 
அத்தை மாமா 
சொற்கள் அன்னியம்!


புதுவை பிரபா ..தஞ்சை   

No comments:

உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]