முன்னுக்கு பின் முரணாக
தமிழன் புரியாத மொழி பேசுபவனை
குருவாக பார்க்கிறான்
சரியாகத் தமிழ் பேசுபவனைக்
குறு குருவெனப் பார்க்கிறான்
காற்றாடி ,கட்டில்,சோறு என்றால்
நகைக்கிறான்
திக்கு ,திங்கள்,ஆழி என்றால்
புரியாமல்
திகைக்கிறான்
உண்மை தானே
அவனைப் பொறுத்தவரை
மம்மி டாடி
அங்கிள் ஆன்டி என்று
பேசுவது கண்ணியம்
அப்பா அம்மா
அத்தை மாமா
சொற்கள் அன்னியம்!
புதுவை பிரபா ..தஞ்சை
No comments:
Post a Comment