Saturday, March 19, 2011

தோழி



**போன வருடம்

பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன

தோழி ஒருத்திக்கு

இந்த பிறந்த நாளில்

இருக்கேனா... செத்தேனா?

எனத் தெரியவில்லை.



**அடுத்த கவிதைத் தொகுப்பின்

முதல் பிரதி

தனக்கே வேண்டுமெனச் சொன்ன

முப்பது தோழிகளின் புதிய எண்களும்

என்னிடம் இல்லை.



**மூன்று வேளைகளும்

சாப்பிட்டாயா? என

குறுந்தகவலில் குடைச்சல் தந்த

தோழியின் அலைபேசிக்கு

அழைக்கிறபோதெல்லாம்

அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்

சொல்லப்படுகிறது.



**என் மகளைத் தன் மகனுக்குக்

கேட்பேன் எனச் சொன்ன

தோழி ஒருத்தி

அவள் திருமணத்துக்கே

என்னை அழைக்கவில்லை.



**திருமணத்துக்குப் பிறகு

தற்செயலாகச் சந்தித்த

தருணமொன்றில் தோழி ஒருத்தியிடம்

கோபித்துக்கொண்டேன்

அவளோ

'அவர் சரி, அத்தை - மாமாவிடம்

சிநேகிதன் ஒருவன் இருந்தானென

எப்படிச் சொல்வது?' என்றாள்.

இருந்தானில் இறந்துபோயிருந்தது

எங்கள் நட்பு!

*
*
*
முருகவேல் ...

1 comment:

வித்யாசன் said...

nalla kavithai nanpaa. vaalthukal.

itupol yosikka naan yen marntyeno ?

உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]